
siragadikka aasai
Siragadikka aasai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் இன்னும் போன் பண்ணவில்லை என்று ரோகிணி வருத்தத்துடன் யாரிடம் உதவி கேட்கலாம் என்று யோசித்து சுருதிக்கு போன் பண்ணி பார்க்கிறார். ஆனால் சுருதி ரவியிடம் வேடிக்கை மட்டும் பார்க்கலாம் யாருக்கும் சப்போர்ட் பண்ண வேண்டாம் என பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனை அடுத்து அண்ணாமலை முத்துவின் பாட்டியை வீட்டிற்கு அழைத்து வர பாட்டி மனோஜிடம் ரோகிணிக்கு போன் பண்ணி விட்டு வீட்டிற்கு அழைத்து வருமாறு சொல்கிறார். பாட்டியின் அறிவுரையை கேட்ட மனோஜ் ரோகிணிக்கு போன் பண்ண ஆனால் ரோகிணி போனை எடுக்கக்கூடாது மனோஜை சுற்ற விட வேண்டும் என்று கூறுகிறார்.
ஆனால் மனோஜ் வேறு வழியில்லாமல் தொடர்ந்து போன் பண்ண கடைசியில் ரோகிணி போன் எடுத்து பேசுகிறார். பாட்டி வீட்டிற்கு வந்து இருக்காங்க உன்ன வர சொல்றாங்க என மனோஜ் கூற இதற்கு ரோகிணி அப்ப நீயா போன் பண்ணி கூப்பிடவில்லையா என்று கூற உடனே மனோஜ் வீட்டிற்கு வா மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்கிறார்.
அதற்கு ரோகிணி நான் வந்தால் உங்க அம்மா என்னை எதுவும் சொல்லக்கூடாது அடிக்க கூடாது என்று கண்டிஷன் போட இந்த கண்டிஷனை பாட்டியிடம் மனோஜ் சொல்கிறார். இதற்கு பாட்டி நான் இருக்கும் பொழுது எந்த ஒரு பிரச்சனையும் நடக்காது நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் உன் பொண்டாட்டியை வரச் சொல்லு எனவும் சொல்கிறார்.
மேலும் உனக்கு மட்டும் தான் என்னை அடிப்பதற்கும் திட்டுவதற்கும் எல்லா உரிமையும் இருக்குது மற்ற யாருக்கும் அந்த உரிமை கிடையாது என்று தெனாவட்டாக ரோகிணி சொல்கிறார். இதனை அடுத்து அண்ணாமலை விஜயாவிற்கு போன் பண்ணி வீட்டிற்கு வா என்று கூப்பிட அதற்கு விஜயா நான் கூட்டிட்டு வந்த மருமகள் அவள் அவ என்கிட்ட பொய் சொல்லி இருக்கா இதனால் எனக்கு கண்டிக்கும் உரிமை இருக்கிறது எனவே அந்த கோபத்தை நான் காட்டுவேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.
வீட்டிற்கு வரும் ரோகிணியை பார்த்து கோபமடைந்த விஜயா அடிக்க அதற்கு மனோஜ் அவளை அடிக்க வேண்டாம் நிறுத்து என்று பேசுகிறார். அப்பொழுது ரோகினி மனோஜை பார்த்து சந்தோஷப்பட இதற்கு விஜயா நான் ஏன் அவளை அடிக்கக்கூடாது என்று கேட்கிறார். இந்த பிரச்சனையில் ரோகிணி க்கு சப்போர்ட் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் மனோஜ் எனக்கு முன்னாடியே ரோகிணி பற்றிய எல்லா உண்மையும் தெரியும் என்று விஜயாவிடம் சொல்ல அதற்கு விஜயா நீ பொய் சொல்ற உனக்கு ரோகிணியை பத்தி எதுவும் தெரியாது என்று மனோஜை திட்டுகிறார். இவ்வாறு மீனாவை தொடர்ந்து விஜயாவிடம் கொத்தடிமையாக சிக்கிவுள்ளார் ரோகிணி.