
pandiyan stores 2 serial
Pandiyan stores serial 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தொடர்ந்து அடுத்தடுத்த ஏராளமான திருப்பங்கள் நிலவி வருகிறது. அதன்படி தற்பொழுது அரசி, குமரவேல் இவர்களுடைய காதல் குறித்து வீட்டிற்கு தெரிய வர ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்தது.
இதனால் பாண்டியன் அரசி இதுவரையிலும் படித்தது போதும் இதற்கு மேல் தனது அக்கா பையனுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று தனது குடும்பத்தினர்களிடம் கூறுகிறார். ஆனால் மூன்று மருமகள்களும் தங்களது புருஷனை வைத்து கோமதி மற்றும் பாண்டியனிடம் பேசிய அரசி கல்லூரிக்கு செல்வதற்கு சம்மதம் வாங்குகின்றனர்.
கோமதி, பாண்டியன் அரசி படிக்க சம்மதம் தெரிவித்தாலும் கல்லூரிக்கு தனியாக செல்லக்கூடாது என்று கண்டிஷன் போடுகின்றனர். எனவே மூன்று அண்ணன்களும் நாங்க போய் கூட்டிட்டு வறோம் என்று கூறுகிறார்கள். இதனை அடுத்து குமரவேல் சுகன்யாவை சந்தித்து அரசியை பார்க்க வேண்டும் பேச வேண்டும் என கெஞ்சுகிறார்.
எனவே சுகன்யாவும் அரசி காலேஜுக்கு கிளம்பி கொண்டு இருக்கிறாள் நா அவள அழைச்சிட்டு வர என கூறுகிறார். அரசி காலேஜுக்கு கிளம்பியதும் செந்தில் நான் போயிட்டு விட்டுட்டு வருகிறேன் என்று சொல்ல ஆனால் சுகன்யா உங்களுக்கு வேலை ஏதாவது இருந்தால் பாருங்க நான் போய் விட்டு வரேன் என்று சொல்கிறார் ஆனால் சுகன்யாவின் மீது மீனாவிற்கு சந்தேகம் வருகிறது.
இருந்தாலும் கோமதி சுகன்யாவே கூட்டிட்டு போயிட்டு வரட்டும் என்று சொல்லி சுகன்யாவுடன் அனுப்பி வைக்க ஆட்டோவில் இருந்து இறங்கியதும் காலேஜில் குமரவேல் அரசியிடம் பார்த்து பேச ஆரம்பிக்கிறார். மீனாவிற்கு சந்தேகம் இருந்ததால் செந்திலை அழைத்துக் கொண்டு காலேஜுக்கு வர அங்கு அரசிடம் குமரவேல் பேசுவதை பார்த்து செந்தில் சட்டையைப் பிடித்து சண்டை போடுகிறார்.
பிறகு மீனா அரசியை காலேஜுக்குள் போ என்று சொல்லிவிட்டு சுகன்யாவிடம் நீங்க தான அவன இங்க வர சொன்னிங்க என்று மீனா சண்டை போட சுகன்யா அதிர்ச்சியடைகிறார். இவ்வாறு சுகன்யா தொடர்ந்து பிரச்சனைகள் உருவாக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.