
veera dheera sooran
veera dheera sooran: சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்து சவாலாக இருக்கும் கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றி நடைப்போட்டு வருபவர் தான் நடிகர் விக்ரம். என்னதான் தனது கடின உழைப்பை செலுத்தி இருந்தாலும் சமீப காலங்களாக இவருடைய படங்கள் கலவை விமர்சனங்களை பெற்று வந்தது.
எனவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வந்த விக்ரமுக்கு தற்பொழுது வீர தீர சூரன் படம் நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை வீர தீர சூரன் திரைப்படம் பெற்று வந்தாலும் ரிலீஸ் ஆவதற்கு முன் பல தடைகள் அதற்கு ஏற்பட்டது.
அதன்படி, வீர தீர சூரன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ஏற்பட்ட பஞ்சாயத்திற்காக விக்ரம் தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து சரி செய்வதாகவும் சொல்லப்படுகிறது. நல்ல கதை அம்சம் கொண்ட படமாக வீர தீர சூரன் அமைந்திருந்தாலும் விக்ரமை பிரச்சனைகள் சுத்தி சுத்தி அடிப்பது போல கடுமையான காலமாகவே அமைந்துள்ளது.
வீர தீர சூரன் படத்தை அருண்குமார் இயக்க இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் ஆகியோர்கள் இணைந்து நடித்துள்ளனர். சித்தா படத்தின் வெற்றியினை தொடர்ந்து அருண்குமார் இயக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் கலவை விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
ஏராளமான ரசிகர்கள் நடிகர் விக்ரமிற்க்கு இந்த படம் நல்ல ஒரு கம்பேக் என்று பாசிட்டிவ் விமர்சனங்களையும் தந்துள்ளார்கள். இவ்வாறு கலவை விமர்சனங்களுக்கு மத்தியில் விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து வசூல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதன்படி, வீர தீர சூரன் படம் உலக அளவில் நான்கு நாட்களில் ரூபாய் 27 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருபுறம் கலவை விமர்சனங்களை வீர தீர சூரன் திரைப்படம் பெற்று வந்தாலும் மறுபுறம் விக்ரமிற்கு ஸ்கெட்ச் போட்டு பிரச்சனை ஏற்படுத்தும் வகையிலும் சூழல்கள் அமைந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தை பார்க்க வேண்டும் என விக்ரம் திரையரங்கத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது கூட ரசிகர்களின் நடவடிக்கைகள் சரியில்லாமல் இருந்ததாலும் உரிய பாதுகாப்பு இல்லை என்பதாலும் காரில் இருந்து கீழே இறங்காமல் கூட மீண்டும் சென்றுள்ளார் விக்ரம்.