
Serial actress maneesha
Serial actress maneesha: சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘சிங்கப்பெண்ணே’ தொடரானது தற்போது மிகவும் பரபரப்பாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் நடக்கும் திருப்பங்கள், ரசிகர்களை உற்சாகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது. தற்போது, கதையின் மையமான நாயகி ஆனந்திக்கு (நடிகை மானீஷா) எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்துள்ளது, இது தொடரில் முக்கியமான திருப்பமாக மாறியுள்ளது.
தற்போது ஒளிபரப்பாகும் எபிசோடுகளில், ஆனந்தி திடீரென கர்ப்பமாக இருப்பதை அறிந்திருக்கிறார். ஆனால், இது எப்போது நடந்தது, எப்படி நடந்தது என்று அவருக்கே புரியவில்லை. இந்த தகவல் அவருக்கு பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் குழப்பத்தில் ஆழ்ந்து செல்கிறார். இது தொடரின் ரசிகர்களிடையே பரபரப்பை உருவாக்கி உள்ளது.
தொடர் மிகுந்த பரபரப்புடன் போய்க்கொண்டிருக்க, நாயகி மனீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள், தொடரின் திருப்பங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், நடிகையின் புதிய புகைப்படங்கள் அவர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

‘சிங்கப்பெண்ணே’ தொடரின் இனி வரும் எபிசோடுகள் மேலும் பரபரப்பாக இருக்குமா? ஆனந்தியின் வாழ்க்கையில் இன்னும் என்னென்ன திருப்பங்கள் வரும்? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இவ்வாறு சிங்கப்பெண்ணே சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை மனிஷா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி தற்பொழுது அருவியில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.