
irfan 1
YouTuber Irfan: கடந்த நாளில் பிரபல யூடியூபர் முகமது இர்ஃபான் ரமலான் நோன்பை முன்னிட்டு தெருவோரங்களில் வாழும் மக்களுக்கு உதவியாக உடைகள் மற்றும் பண உதவி வழங்கிய வீடியோவை வெளியிட்டார். இதில், அவர் தனது மனைவியுடன் காரில் அமர்ந்தபடியே பொருட்களை வழங்க, மக்கள் அவற்றை பெற ஆர்வமாக முன்வந்தனர்.
இதனால் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சை வெடித்தது. ஆனால், இர்ஃபானின் நடத்தையும், அவர் அந்த நேரத்தில் கூறிய சில கருத்துகளும் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தனர். இதனால், சமூக ஊடகங்களில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். விஜே பார்வதியும் தனது கண்டனத்தை தெரிவித்து, இந்த நடவடிக்கையை தவறாக விமர்சித்தார்.
விமர்சனத்திற்குப் பிறகு இர்ஃபானின் விளக்கம் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அதிகரித்த நிலையில், இர்ஃபான், ஈது பெருநாள் நாளில் வெளியிட்ட வீடியோவிற்கு விளக்கம் அளித்தார். “நானும் கடினமான சூழ்நிலையிலிருந்து உயர்ந்தவன் தான். இந்த உதவிகள் எதுவுமே திட்டமிட்டது அல்ல. அந்த நேரத்தில் யாரும் இல்லாததால், என் மனைவியுடன் சென்றேன். ஆனால், அவள் மனவருத்தமடைந்ததால், அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது எனத் தெரியவில்லை,” என அவர் கூறினார்.
மேலும் இர்ஃபான்
இந்த வீடியோவின் இறுதியில், கடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்டார். “இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” என்று உறுதியளித்தார். இர்ஃபான் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபரில், தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்டதால், மருத்துவத் துறை அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிவித்ததால், பலர் விமர்சனம் செய்தனர்.